தூய்மையான இலங்கை வேலைத்திட்டம் ஜனவரி 1 முதல் அமலுக்கு!!
"தூய்மையான இலங்கை" வேலைத்திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஜனவரி 1 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
திட்டத்தை முன்னெடுப்பதற்காக 18 உறுப்பினர்களுடன் ஜனாதிபதி செயலணியொன்று அமைக்கப்பட்டுள்ளது.
இதில் ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் என். எஸ். குமாநாயக்க, பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
0 Comments