இலங்கை மத்திய வங்கியால் நடுத்தர நிறுவனங்களுக்கு நிவாரணம்!!
கொரோனா வைரஸ் தொற்று மற்றும் பொருளாதார சவால்களால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு (SMEs) நிவாரணம் வழங்குவதற்காக, இலங்கை மத்திய வங்கி ஒரு விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பு, 2024 டிசம்பர் 15 ஆம் தேதி நிலுவையில் உள்ள 25 மில்லியன் ரூபாய்க்கு குறைவான கடன்களுக்கான நிவாரணத்தைக் கவனத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
25 மில்லியன் ரூபாய்க்கு குறைவான கடன்களுக்கான திருப்பிச் செலுத்தல் திட்டம் 2024 டிசம்பர் 15 இல் தொடங்கப்படும்.
25 முதல் 50 மில்லியன் ரூபாய் இடைப்பட்ட கடன்கள் 2025 செப்டம்பர் 30க்குள் திருப்பிச் செலுத்தத் தொடங்க வேண்டும்.50 மில்லியன் ரூபாய்க்கு மேல் கடன்கள் 2025 ஜூன் 30க்குள் திருப்பிச் செலுத்தத் தொடங்க வேண்டும்.
இந்த நிவாரண திட்டம் கொரோனா தொற்றினால் நேரடியான அல்லது மறைமுகமான பாதிப்புக்கு உள்ளான SME வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
மத்திய வங்கி இந்த அறிவிப்பின் மூலம் பாதிக்கப்பட்ட வணிகங்களை மீண்டும் தக்கவைத்துக் கொள்வதற்கும், அவர்கள் பணியாளர்களின் பிழைப்பை பாதுகாப்பதற்கும் துணைநிற்க நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்தகைய நடவடிக்கைகள் பொருளாதாரத்தை மீளச் சீரமைக்கும் வழியில் முக்கிய பங்கு வகிக்கும் என நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
0 Comments