தொடருந்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு: பயணச்சீட்டு திரும்பப்பெறும் நடைமுறைகளில் மாற்றம்!!
தொடருந்து திணைக்களம் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கான பயணச்சீட்டுகள் மற்றும் பணத்தை திரும்பப் பெறும் நடைமுறைகள் தொடர்பான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
புதிய நடைமுறைகள்:
1. முன்பதிவு செய்த போது அடையாளத் தகவல்:
பயணிகள் இனிமேல் முன்பதிவு செய்யும் போது தேசிய அடையாள அட்டை எண் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு எண் வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
2. பணம் திரும்பப் பெறும் போது:
2024 ஜனவரி 1 முதல், முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுகளுக்கான பணத்தை திரும்பப் பெற, பயணச்சீட்டு உரிமையாளர் அவரது
தேசிய அடையாள அட்டை அல்லது
வெளிநாட்டு கடவுச்சீட்டு நகலை சமர்ப்பிக்க வேண்டும்.
3. சரிபார்ப்பு நடைமுறை:
பயணச்சீட்டின் உரிமையாளரை உறுதிப்படுத்த தொடருந்து நிலையத்திற்குள் பிரவேசிக்கும் போது மற்றும்
பயணச்சீட்டு சரிபார்ப்பு நேரத்தில்,
பயணச்சீட்டில் குறிப்பிடப்பட்ட அடையாள எண் சரிபார்க்கப்படும்.
பயணச்சீட்டின் உரிமையாளரை உறுதிப்படுத்த தொடருந்து நிலையத்திற்குள் பிரவேசிக்கும் போது மற்றும்
பயணச்சீட்டு சரிபார்ப்பு நேரத்தில்,
பயணச்சீட்டில் குறிப்பிடப்பட்ட அடையாள எண் சரிபார்க்கப்படும்.
தொடருந்து பயணங்களில் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்தவே இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
_Srilanka Tamil News_
0 Comments