Ticker

10/recent/ticker-posts

சிவனொளிபாத மலைக்கு சென்ற இளைஞன் கைது!!

 சிவனொளிபாத மலைக்கு சென்ற இளைஞன் கைது!!

ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் சிவனொளிபாத மலை யாத்திரைக்கு வந்த இளைஞன் ஒருவன் ஹட்டன் ரயில் நிலையத்தில் வைத்து நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேகநபர், கேகாலை பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடையவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கைதான இளைஞன் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த உடரட்ட மெனிக்கே ரயிலில், இன்னொரு குழுவுடன் வந்துள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்த பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment

0 Comments