கிளிநொச்சியில் புதையல் தோண்ட முயற்சித்த 10 பேர் கைது!!
கிளிநொச்சி திருநகர் பகுதியில் புதையல் தோண்ட முயற்சித்த 10 பேர் இன்று (ஜனவரி 25) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கிளிநொச்சி பொலிஸாரின் உதவியுடன் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, சந்தேகநபர்கள் புதையல் தோண்ட பயன்படுத்திய ஸ்கானர் மற்றும் நீர்ப்பம்பி உள்ளிட்ட உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டு, கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Srilanka Tamil News
0 Comments