வவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு: 72 மரங்கள் கைப்பற்றப்பட்டன, சாரதி கைது!!
வவுனியாவின் மரக்காரம்பளையில் இன்று (ஜனவரி 9) நடந்த மரக்கடத்தல் சம்பவம் முறியடிக்கப்பட்டுள்ளது. நெளுக்குளம் பொலிஸாரின் சோதனையில், சந்தேகத்திற்கு இடமாக ஜீப் ரக வாகனத்தை சோதனை செய்த போது, 72 மரங்கள் கைப்பற்றப்பட்டன. இவ்வாறு கைப்பற்றப்பட்ட மரங்களின் மதிப்பு சுமார் இரு லட்சம் ரூபாய்கள் ஆகும்.
குறித்த மரக்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஜீப் வாகனமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டு, சாரதி கைது செய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளின் பின்னர், சாரதி நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
_Srilanka Tamil News_
0 Comments