துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மேலும் இரண்டு இந்திய கடற்றொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி!!
யாழ்ப்பாணம் | ஜனவரி 30, 2025
இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மேலும் இரண்டு இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம், நேற்று அதிகாலை டெல்ஃப்ட் தீவு அருகே நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை கடற்பரப்புக்குள் அனுமதியின்றி நுழைந்ததாக கூறப்படும் 13 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது நடவடிக்கையின் போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மீதமுள்ள 11 மீனவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது, பிப்ரவரி 10ஆம் தேதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இந்தியா-இலங்கை இடையிலான மீன்பிடித் தகராறு தொடர்பாகவும், இரு நாடுகளுக்கிடையேயான கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அதிகாரிகள் இந்த சம்பவத்துக்கு எதிராக உடனடி பதிலளிக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
Srilanka Tamil News
0 Comments