புகைப்படத்தில் இருக்கும் மாணவியை தெரிந்தால் அழையுங்கள்! உதவி கோரும் பொலிஸார்!!
பதுளை, எட்டாம்பிட்டிய: 16 வயது பாடசாலை மாணவியை காணாமல் போயுள்ளதாக எட்டாம்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார், இந்த மாணவியை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை கோருகின்றனர்.
குறித்த மாணவி, ஜனவரி 3ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். காணாமல் போன சிறுமி சுமார் 5 அடி 2 அங்குல உயரம் மற்றும் சாதாரண உடலமைப்பை கொண்டவளாக விளக்கப்படுகிறார். அவர் இறுதியாக, வெளிர் பச்சை நிற, நீளமான சட்டை அணிந்திருந்ததாகவும், இடது கையில் முழங்கைக்கு அருகில் சிறிய வெட்டு காயம் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மாணவியைப் பற்றிய தகவல்களை பெற்றவர்கள், கீழ்காணும் தொலைபேசி இலக்கங்களில் உடனடியாக தகவல் வழங்குமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்:
பொறுப்பதிகாரி - எட்டாம்பிட்டிய: 0718591528
எட்டாம்பிட்டிய பொலிஸ் நிலையம்: 0552295466
இந்த மாணவியை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவி மிக முக்கியம் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
_Srilanka Tamil News_
0 Comments