மட்டக்களப்பில் பாரிய விபத்து: முச்சக்கர வண்டியில் பயணித்த ஆறு பேர் காயம்!!
மட்டக்களப்பின் வாழைச்சேனை பிரதான வீதியில் இன்று பாரிய விபத்து இடம்பெற்றது. நின்று கொண்டிருந்த எரிபொருள் கொள்கலன் லொறியின் பின்னால் முச்சக்கர வண்டி மோதியதன் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில், முச்சக்கர வண்டியில் பயணித்த ஆறு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொலிஸாரின் தகவலின்படி, இவர்கள் ஓட்டமாவடியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இவ்விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் தற்போது பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகின்றன.
Srilanka Tamil News
0 Comments