யாழில் கஞ்சா வைத்திருந்த நபர் பொலிஸாரால் கைது!!
வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் கேரள கஞ்சா வைத்திருந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட விசேட அதிரடிப் படையினர் மற்றும் மருதங்கேணி பொலிஸார் இணைந்து நேற்று (20) இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். இதன்போது, சந்தேகநபரிடம் இருந்து 5 கிலோ 660 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Srilanka Tamil News
0 Comments