மினுவாங்கொடை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் : பெண் ஒருவர் கைது!!
மினுவாங்கொடை – பத்தடுவன சந்தியில் முச்சக்கர வண்டி நிறுத்தம் அருகில் கடந்த 26 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், 36 வயதான லஹிரு ரந்தீர் காஞ்சன என்ற முச்சக்கர வண்டி சாரதி தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
போலிஸார் வழங்கிய தகவலின்படி, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குறித்த சாரதியை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளின் உரிமையாளரான பெண் மற்றும் மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
— Srilanka Tamil News
0 Comments