அம்பாறையில் கேரள கஞ்சா வைத்திருந்த நபர் கைது!!
அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில், அண்மையில் கேரளா கஞ்சா விற்பனைக்கான புகார்களின் அடிப்படையில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவினரால் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது, 26 வயதுடைய சந்தேக நபர் 1 மில்லி கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான நபர், சான்றுப் பொருட்களுடன் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைக்காக முற்படுத்தப்படவுள்ளார்.
பொலிஸ் துறை, மேற்படி பகுதியில் கேரளா கஞ்சா விற்பனை தொடர்பான தீவிர சோதனை நடவடிக்கைகள் தொடரும் என்றும் அறிவித்துள்ளது.
_Srilanka Tamil News
0 Comments