Ticker

10/recent/ticker-posts

ஆனையிறவு: பெயரைக் கேட்டதும் அதிரும் அநுர அரசு..!!!

ஆனையிறவு: பெயரைக் கேட்டதும் அதிரும் அநுர அரசு..!!!

ஆனையிறவு பிரதேசம் தற்போது தமிழர் பரப்பில் முக்கியமான விவகாரமாக மாறியுள்ளது. ரஜலுணு விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆனையிறவு உப்பளத்துடன் தொடர்புடைய "பதம்" ஏன் தவிர்க்கப்பட்டுள்ளது என்ற கேள்வி எழுந்து வருகிறது.

இதனை அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் வலையொலி செய்பவர்களிடையே விவாதம் அலைமோதுகிறது. கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும், சமூகத்தில் உள்ள குழப்பங்களை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.


இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஆனையிறவு உப்பின் அடையாளப் பெயரை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்தக் கோரிக்கை, ஆனையிறவு உப்பின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.


இந்த விவகாரம் சமூக மற்றும் அரசியல் ரீதியாக பெரும் கவனத்தை ஈர்த்து, அதன் பின்னணி மற்றும் விளைவுகள் பற்றி மேலும் ஆராய வேண்டிய அவசியம் இருக்கின்றது.

Srilanka Tamil News


Post a Comment

0 Comments