வவுனியாவில் இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து திடீர் சுற்றிவளைப்பு!!
வவுனியா தேக்கவத்தை ஆலடி சந்தி முதல் தேக்கவத்தை மைதானம் வரை இன்று (மார்ச் 24) அதிகாலை இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து விசேட சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
பாதுகாப்பு அதிகாரிகளின் தகவலின்படி,
✅ நீதிமன்றத்தால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டவர்களை கைது செய்தல்
✅ குற்றச் செயல்களில் தொடர்புடையவர்களை அடையாளம் காணுதல்
✅ போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துதல்
போன்ற நோக்கங்களின் கீழ், இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்காக, பொலிசாருக்கு ஆதரவாக இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும், இதுவரை எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அல்லது ஏதேனும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை.
Srilanka Tamil News
0 Comments