வவுனியா சிறைச்சாலையில் இருந்து ஒருவர் தப்பியோட்டம்!!
வவுனியா, மார்ச் 22 – வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தப்பியோடியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்டிருந்த நபர் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. 9 வயது சிறுமியை தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் அவர், நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். உடல் நலக்குறைவால் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவர் தப்பியோடியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக வவுனியா சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் எந்தவொரு சந்தேகத்திற்கிடமான தகவலையும் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Srilanka Tamil News
0 Comments