Ticker

10/recent/ticker-posts

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் கொலை: கொழும்பில் சம்பவம்!!!

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் கொலை: கொழும்பில் சம்பவம்!!

கொழும்பு கிராண்ட்பாஸ், முவதொர உயன பிரதேசத்தில் இன்று அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட கொடூர சம்பவத்தில் 60 வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

பொலிஸாரின் தகவலின்படி, சம்பவத்தன்று கணவருக்கும் மனைவிக்கும் இடையில் கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது. அச்சமயத்தில், அங்கிருந்த 26 வயது இளைஞர் ஒருவர் தகராறை சமரசப்படுத்த முயற்சி செய்துள்ளார். எனினும், எதிர்பாராத விதமாக கணவர் தன் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து, இளைஞரையும் தாக்கி பலத்த காயங்களுக்குள்ளாக்கியுள்ளார்.
காயமடைந்த இளைஞர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறுகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துக்குப் பிறகு சந்தேகநபரான கணவர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய நபரை பிடிக்க தீவிர சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.


இந்தக் கொடூர சம்பவம் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Srilanka Tamil News


Post a Comment

0 Comments